ஒற்றைத் தலைவலி என்றால் என்ன | Migraine meaning in Tamil
டிசம்பர் 10, 2020 Brain Diseases 2844 Viewsஒரு நாள் ரியா என்னும் பெண், அவர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென அவர் தலையின் கீழ் பகுதியில் கடுமையான தலைவலி ஏற்பட்டது, இதன் விளைவாக வாந்தியும் உண்டானது. அதன் பின் அவருக்கு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் நமக்கு உண்டாகும் தலை வலியை நாம் புறக்கணிக்கிறோம், இதன் விளைவாக ஒற்றைத் தலைவலி ஏற்படத்தொடங்குகிறது. ஒற்றைத் தலைவலி என்றால் என்ன ?
தலைவலி நோய் உலகளவில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒற்றைத் தலைவலியின் பிடியில் நம் நாட்டு மக்களும் எளிதில் மாட்டிக்கொள்கின்றனர். ஒற்றைத் தலைவலி அதிக உடல் பாகங்களை இயக்குவதன் மூலம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மக்கள் ஒற்றைத் தலைவலியை புறக்கணித்து அதிகமாக வேலை செய்யும் போது தலைவலி அதிகரிக்கத் தொடங்குகிறது. ஒற்றைத் தலைவலி காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது, நிலையான மன அழுத்தம் உண்டாகிறது.
ஒற்றைத் தலைவலி என்றால் என்ன? (What is migraine meaning in Tamil?)
ஒற்றைத் தலைவலி ஆங்கிலத்தில் மைக்ரேன் என்று அழைக்கப்படுகிறது. 40 மில்லியன் மக்கள் தங்கள் நாட்டில் ஒற்றைத் தலைவலி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் தேசிய ஹேண்டாக் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஒற்றைத் தலைவலி நோய் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து பரவுகிறது என்றும், தலையின் கீழ் பகுதியில் நிறைய வலி உண்டாகும் என்றும், இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது என்றும், தலைவலியின் போது மண்டை ஓட்டின் கீழ் உள்ள ஆர்ட்ரி பெரிதாகிறது என்றும் சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி காரணமாக எரிச்சல் உணர்வு, வாந்தியெடுத்தல் மற்றும் இரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. இதில் தலையின் பாதியில் வலி இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of migraine in Tamil?)
- நமக்கு சில நேரங்களில் திடீரென தலைவலி ஏற்படும், அந்த தலைவலி சோர்வு காரணமாக உண்டாகிறது என எண்ணுவது தவறாகும். எனினும், தலையின் பாதியில் மட்டுமே வலியை உணடானால், அது ஒற்றைத் தலைவலியின் அறிகுறியாகும். அவ்வாறு ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது, மனம் தலைவலிக்கு மட்டுமே கவனம் செலுத்துகிறது, உடலின் மற்ற பகுதிகளின் வலியை நாம் மறந்து விடுகிறோம்.
- ஒற்றைத் தலைவலி ஏற்படுவது நரம்பியல் பிரச்சினை என்றும் கூறுகின்றனர். இதில் ஒரு நபருக்கு அடிக்கடி வலி ஏற்படுகிறது, மேலும் இந்த வலி தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீடிக்கிறது. இதில் வாந்தி, குமட்டல், பதற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
- ஒற்றைத் தலைவலி தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.
- ஒற்றைத் தலைவலி ஏற்படும் சிலருக்கு ஃபோட்டோபோபியா உள்ளது, அதாவது அதிக ஒளியின் காரணமாக சிக்கல், மற்றும் சிலருக்கு ஃபோனோபோபியா உள்ளது. ஃபோனோபோபியாவில் மக்கள் அதிக சத்தத்தை விரும்புவதில்லை. இவை ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளுள் ஒன்றாகும்.
ஒற்றைத் தலைவலிக்கு என்ன காரணம்? (What are the causes of migraine in Tamil?)
- ஒற்றைத் தலைவலி, பசியின்மை, முழுமையான தூக்கமின்மை, குமட்டல் போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. மேலும், ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற வேறு சில நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒற்றைத் தலைவலியின் நிலை அதிகரிக்கிறது.
- ஒற்றைத் தலைவலிக்கு மற்றொரு காரணம், உணவுக்கு ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை ஒற்றைத் தலைவலி பிரச்சினையை ஏற்படுத்துகிறது, ஒவ்வாமை சில காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதாலும் ஏற்படலாம், சிலருக்கு புகைபப்பிடித்தலினாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படுகின்றது.
ஒற்றைத் தலைவலியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் யாவை? (How to treat migraine in Tamil?)
- ஒற்றைத் தலைவலியைத் தவிர்க்க, நம் வாழ்வின் அன்றாட பழக்கங்களில் சில மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும்.
- நாம் தினமும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், மாலையில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும், சீரான உணவை உண்ண வேண்டும், மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
ஒற்றைத் தலைவலியில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது? (What food is good for migraine and what food is bad for migraine in Tamil?)
என்ன சாப்பிட வேண்டும்–
உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருந்தால், உலர் பழங்கள், பால், தயிர், பயிறு, இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை காலை உணவில் சாப்பிடலாம். காரமான ரொட்டி, அரிசி, உருளைக்கிழங்கு, புரதம் நிறைந்த உணவுகளை மட்டும் இரவு உணவில் எடுத்துக் கொள்ளவும்.
என்ன சாப்பிடக்கூடாது–
ஒற்றைத் தலைவலியில், குப்பை உணவுகள் (junk food), பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் அதிக அளவில் மசாலாப் பொருட்கள் இட்டுத் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
ஒற்றைத் தலைவலியை எவ்வாறு அகற்றுவது? (How to Ease migraine in Tamil?)
ஒற்றைத் தலைவலியைப் போக்க தியானம் மற்றும் யோகா செய்ய வேண்டும். நீங்கள் யோகா செய்ய முடியாவிட்டால், உடற்பயிற்சி செய்யலாம், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் மன அழுத்தம் குறைந்து, மனச்சோர்வு நீக்குகிறது. வெயிலில் அதிகமாக நிற்க கூடாது மற்றும் வலுவான வாசனை நிரம்பிய பொருள்களை நுகர்தலைத் தவிர்க்கப்பட வேண்டும். ஒற்றைத் தலைவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக தூக்கம் கொள்ள வேண்டும். உங்களுக்கு திடீரென வலி ஏற்பட்டால், வலி மாத்திரைகள் எடுக்க வேண்டாம். உங்களுக்கு அதிக வலி இருந்தால், நீங்கள் ஒரு நல்ல நரம்பியல் மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் இருந்தால், ஒரு நல்ல நரம்பியல் மருத்துவரைத் தொடர்பு (Neurologist) கொள்ளுங்கள்.